ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், அம்மாநிலத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தற்போது 23 பேர் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மாநில சுகாதாரத் துறை இயக்குநர் நீலகண்ட மிஷ்ரா கூறுகையில், நாள்தோறும் ஒடிசாவில் சராசரியா 5 முதல் 7 கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வரும் ஜூன் 20 ஆம் தேதி கோடைக்காலம் முடிவடைந்து ஒடிசாவில் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிக்கூடங்களில் கரோனா பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நேற்று (ஜூன் 5) அம்மாநில அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அணு ஆயுதக் குறைப்பு எப்போது?

ஐ.நா.வில் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த மறுஆய்வு மாநாடு: உடன்பாடின்றி நிறைவு

வங்கதேசத்தில் தொடரும் தட்டம்மை பரவல்! 499-ஐ எட்டிய உயிர்ப் பலிகள்!

வெப்பம் தொடா்பான உடல்நல பாதிப்புகள்: தில்லி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் அதிகரிப்பு
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



