கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், அம்மாநிலத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தற்போது 23 பேர் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அம்மாநில சுகாதாரத் துறை இயக்குநர் நீலகண்ட மிஷ்ரா கூறுகையில், நாள்தோறும் ஒடிசாவில் சராசரியா 5 முதல் 7 கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வரும் ஜூன் 20 ஆம் தேதி கோடைக்காலம் முடிவடைந்து ஒடிசாவில் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிக்கூடங்களில் கரோனா பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நேற்று (ஜூன் 5) அம்மாநில அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com