மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தொழிலாளர்களின் வேலைநேரத்தை உயர்த்திய ஆந்திர அரசு! தொழிற்சங்கங்கள் போராட்டம்

ஆந்திரப் பிரதேசத்தில் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 10 மணிநேரமாக உயர்த்தியதற்கு தொழிற்சங்கங்கள் கண்டனம்

News image
- ENS
Updated On :7 ஜூன் 2025, 10:54 am

DIN

ஆந்திரப் பிரதேசத்தில் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 9-லிருந்து 10 மணிநேரமாக அம்மாநில அரசு உயர்த்தியதற்கு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஆந்திரப் பிரதேசத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்க, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அந்த வகையில், தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தினசரி 10 மணிநேரம் பணிபுரியும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டுவர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, அம்மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கூறுகையில், ஒருநாளில் அதிகபட்சமாக 9 மணிநேர வேலையை அனுமதிக்கும் பிரிவு 54, இப்போது 10 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர்வரையில், காலாண்டுக்கு 75 மணிநேரமாக இருந்த கூடுதல் நேர வேலை (OT - Overtime), இப்போது 144 மணிநேரமாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிலாளர் சட்டங்களில் திருத்தப்பட்டிருக்கும் இந்தத் திருத்தங்கள் காரணமாக, இங்கு அதிகளவிலான முதலீட்டாளர்கள் வருகை தருவர்.

மேலும், முன்னர்வரையில் இரவுநேரப் பணிகளில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இப்போது அவர்களும் இரவுநேரப் பணிகளில் வேலைசெய்ய விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. இப்போது, அவர்கள் போக்குவரத்து வசதி, பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பணியாற்ற முடியும். இந்த புதிய விதிகள், பெண்களுக்கு பொருளாதார ரீதியான அதிகாரமளிக்கின்றன. தொழிற்துறை வளர்ச்சியையும் ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்தார்.

இருப்பினும், அம்மாநிலத்தின் இந்தப் புதிய திருத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், ஆந்திர அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து, நாடு முழுவதும் ஜூலை 9 ஆம் தேதியில் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.