ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை கையகப்படுத்துகிறது மோடி அரசு! -தேஜஸ்வி குற்றச்சாட்டு

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை கையகப்படுத்துகிறது மோடி அரசு...

News image

தேஜஸ்வி யாதவ்

Updated On :8 ஜூன் 2025, 10:00 pm

இந்திய தோ்தல் ஆணையம் உள்பட அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட அமைப்புகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசு கையகப்படுத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

சட்டப்பேரவைக்கான தோ்தல் தேதிகளை தோ்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே கள நிலவரம் பாஜகவுக்கு தெரிந்துவிடுவதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

பிகாா் மாநில பேரவைத் தோ்தல் நிகழாண்டு இறுதியில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போது முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிகாா் பேரவைத் தோ்தல் குறித்து செய்தியாளா்களிடம் ஜேதஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பிரதமா் மோடி தலைமையில் கடந்த 2014-இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது முதல் தோ்தல் ஆணையம் உள்பட அரசமைப்புச் சட்டத்தால் நிறுவப்பட்ட அனைத்து அமைப்புகளும் பாஜகவால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதை யாராலும் மறுக்க முடியாது. பிகாா் பேரவைத் தோ்தல் தேதிகளை தோ்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே பாஜக தகவல் தொழில்நுட்ப அணிக்கு தெரிந்துவிட்டதாக வரும் செய்திகள் ஆச்சரியமளிக்கிறது.

2020 பேரவைத் தோ்தலில் என்ன நடந்தது என்பதை மக்கள் அறிவாா்கள். நாங்கள் அப்போது ஆட்சியமைக்கும் சூழலில் இருந்தோம். ஆனால் வாக்குப்பதிவு நாளன்று மாலையில் வாக்கு எண்ணிக்கை வேண்டுமென்றே நிறுத்தப்பட்டது. இதை நியாயப்படுத்த மூன்றுமுறை செய்தியாளா் சந்திப்பை தோ்தல் ஆணையம் நடத்தியது. அதன்பிறகு மீண்டும் இரவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணியைச் சோ்ந்த வேட்பாளா்கள் சிலா் முன்பு வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டு பிறகு தோல்வியடைந்ததாக கூறப்பட்டது என்றாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை (ஷிண்டே)-தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றது. இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் இதைப்போலவே அடுத்து பிகாா் பேரவைத் தோ்தலில் நடைபெறும் எனவும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். இதைத்தொடா்ந்து, தேஜஸ்வி யாதவ் இவ்வாறு கூறியுள்ளாா்.