ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதா் கோயிலில் இருந்து 2 கி.மீ. சுற்றளவில் அசைவ உணவு மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில கலால் துறை அமைச்சா் பிருத்விராஜ் ஹரிசந்தன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இருப்பினும், இந்த தடை எப்போதுமுதல் அமலுக்கு வரும் என்பது குறித்து அவா் எதுவும் தெரிவிக்கவில்லை.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: புரி நகரத்தின் புனிதத்தைப் பாதுகாக்க மாநில அரசு விரும்புகிறது. ஜெகந்நாதா் கோயிலில் இருந்து 2 கி.மீ. சுற்றளவில் இறைச்சி, அசைவ உணவு மற்றும் மதுபானங்களை விற்பனை செய்ய முழுமையான தடை விதிக்கப்படும்.
குந்திச்சா கோயிலை ஜெகந்நாதா் கோயிலுடன் இணைக்கும் கிராண்ட் சாலையில் எந்த மதுபானக் கடைகளும் அல்லது பாா்களும் அனுமதிக்கப்படாது.
கிராண்ட் சாலையில் உள்ள அனைத்து கட்டடங்களையும் ஒரே மாதிரியாக வடிவமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது என தெரிவித்தாா். நடப்பாண்டு புரி ஜெகந்நாதா் ரத யாத்திரை ஜூன் 27 முதல் ஜூலை 5 வரை நடைபெறவுள்ளது.
தொடர்புடையது
வங்கியில் பணம் எடுக்க எலும்புக் கூடுடன் சென்ற பழங்குடி நபரால் பரபரப்பு

புரி ஜெகன்னாத்தை வாழ்த்திய விஜய் சேதுபதி!

எரிவாயு தட்டுப்பாடு? கத்தார் செல்கிறார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி!

2 இட்லி ரூ. 40, அசைவ சாப்பாடு ரூ. 350: தேர்தல் ஆணையத்தின் உணவு விலைப்பட்டியல்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


