
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 50 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதுவரை 130 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட உடல்கள் கருகிய நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. விமானத்தில் 53 பிரிட்டன் நாட்டவர் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடம், குடியிருப்புப் பகுதி என்பதால், அங்கிருந்த கட்டடங்களிலும் தீப்பற்றி எரிந்தது.
இதுவரை விமான விபத்து நடந்த இடத்திலிருந்து 130 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க.. விமானியிடமிருந்து வந்த அவசர அழைப்பு, ஆனால் பேசவில்லை! மே டே கால் என்றால்?
விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்தில் சிக்கிய விமானத்தில் 7 குழந்தைகள் பயணித்ததாகவும், அதில் இரண்டு கைக்குழந்தைகள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து இன்று மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட விமானத்திலிருந்து 1.39 மணிக்கு அவசரஅழைப்பு வந்த நிலையில், அது துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணம் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.