பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானத்தில் 13 பேர் பலியாகினர்.
பெரு நாட்டில் புகழ்பெற்ற நாஸ்கா கோடுகளைப் பார்வையிட இகா நகரத்திலிருந்து ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளுடன் விமானம் சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றது.
இந்த விமானம் நாஸ்கா நகரிற்கு வெளியே உள்ள வயல்வெளியில் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 13 பேர் பலியானதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலியானவர்களில் 7 பேர் இத்தாலி, 2 பேர் ஸ்பெயின், 2 பேர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று பெருவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மற்ற இருவர் விமானி ஆவர்.
இந்த விபத்துக்கு அதிபர் கெய்கோ புஜிமோரி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பெரு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Summary
A plane carrying European tourists to view the famed Nazca Lines crashed into a field outside the Peruvian city of Nazca, killing 13 people, local authorities said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உக்ரைன் துறைமுகத்தில் 4 இந்தியர்களுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்!

ஜெர்மனியில் வீட்டின் மீது மோதிய சிறிய ரக விமானம்: ஒருவர் பலி

வெனிசுவேலா நிலநடுக்கம்: 3,000-ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை!

28.6.1976: 226 பேருடன் பிரான்ஸ் விமானம் கடத்தப்பட்டது
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



