தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவரின் அதிர்ச்சிப் பதிவு!

விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவரின் விடியோ வைரலாகியிருக்கிறது.

News image

விபத்துக்குள்ளான விமானம்

Updated On :12 ஜூன் 2025, 12:14 pm

இணையதளச் செய்திப் பிரிவு

குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்தவர் ஒருவர் வெளியிட்டிருக்கும் விடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விபத்தில் சிக்கிய அதே விமானத்தில் 2 மணி நேரத்துக்கு முன்பு பயணித்து, ஆமதாபாத்தில் இறங்கிய ஆகாஷ் என்பவர், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஏர் இந்தியா 171 விமானத்தில் இருந்து கோளாறுகளையும், குறைபாடுகளையும் படமெடுத்திருக்கிறார். இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அனுப்பி அவர் விளக்கம் கேட்க நினைத்திருக்கிறார்.

தில்லியிலிருந்து ஆமதாபாத் செல்வதற்காக விபத்துக்குள்ளான இந்த ஏர் இந்தியா விமானத்தில்தான் அவர், விமானம் விபத்தில் சிக்குவதற்கு 2 மணி நேரம் முன்பு பயணம் செய்திருக்கிறார். அப்போது, அவர் அந்த விமானத்தையும், அதில், பயணிகளின் இருக்கையில் வைக்கபபட்டிருக்கும் தொலைக்காட்சி செயல்படவில்லை. தொலைபேசிகள் இயங்கவில்லை என்பதை கண்டறிந்து அதனை விடியோவாக எடுத்துள்ளார்.

Story image

விபத்தில் சிக்கிய இந்த விமானம், இன்று முற்பகலில் தில்லியிலிருந்து புறப்பட்டு ஆமதாபாத் சென்றுள்ளது. ஆகாஷ் தில்லியிலிருந்து ஆமதாபாத் சென்றுள்ளார். பிறகு, அந்த விமானம் ஆமதாபாத்திலிருந்து லண்டன் கிளம்பியபோதுதான் விபத்துக்குள்ளானது.

அதில் 242 பேர் பலியான நிலையில், பெரும்பாலானோர் பலியாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விமானத்தில் ஆகாஷ் பயணித்தபோது அங்கிருந்த குறைபாடுகளை அவர் விடியோ எடுத்து, அதனை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அனுப்பி விளக்கம் கேட்க நினைத்திருந்தநிலையில்தான், சற்று நேரத்தில் எல்லாம் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

விமானத்தில் தான் எடுத்த விடியோக்களையும் அவர் எக்ஸ் பக்கத்தில் இணைத்துள்ளார். அந்த விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது. விபத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசி விடியோவாகவும் மாறியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.