குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்தவர் ஒருவர் வெளியிட்டிருக்கும் விடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விபத்தில் சிக்கிய அதே விமானத்தில் 2 மணி நேரத்துக்கு முன்பு பயணித்து, ஆமதாபாத்தில் இறங்கிய ஆகாஷ் என்பவர், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஏர் இந்தியா 171 விமானத்தில் இருந்து கோளாறுகளையும், குறைபாடுகளையும் படமெடுத்திருக்கிறார். இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அனுப்பி அவர் விளக்கம் கேட்க நினைத்திருக்கிறார்.
தில்லியிலிருந்து ஆமதாபாத் செல்வதற்காக விபத்துக்குள்ளான இந்த ஏர் இந்தியா விமானத்தில்தான் அவர், விமானம் விபத்தில் சிக்குவதற்கு 2 மணி நேரம் முன்பு பயணம் செய்திருக்கிறார். அப்போது, அவர் அந்த விமானத்தையும், அதில், பயணிகளின் இருக்கையில் வைக்கபபட்டிருக்கும் தொலைக்காட்சி செயல்படவில்லை. தொலைபேசிகள் இயங்கவில்லை என்பதை கண்டறிந்து அதனை விடியோவாக எடுத்துள்ளார்.

-
விபத்தில் சிக்கிய இந்த விமானம், இன்று முற்பகலில் தில்லியிலிருந்து புறப்பட்டு ஆமதாபாத் சென்றுள்ளது. ஆகாஷ் தில்லியிலிருந்து ஆமதாபாத் சென்றுள்ளார். பிறகு, அந்த விமானம் ஆமதாபாத்திலிருந்து லண்டன் கிளம்பியபோதுதான் விபத்துக்குள்ளானது.
அதில் 242 பேர் பலியான நிலையில், பெரும்பாலானோர் பலியாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விமானத்தில் ஆகாஷ் பயணித்தபோது அங்கிருந்த குறைபாடுகளை அவர் விடியோ எடுத்து, அதனை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அனுப்பி விளக்கம் கேட்க நினைத்திருந்தநிலையில்தான், சற்று நேரத்தில் எல்லாம் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
விமானத்தில் தான் எடுத்த விடியோக்களையும் அவர் எக்ஸ் பக்கத்தில் இணைத்துள்ளார். அந்த விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது. விபத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசி விடியோவாகவும் மாறியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு

பெரு நாட்டில் சுற்றுலாப் பயணிகள் சென்ற விமானம் விபத்து- 13 பேர் பலி

ஜெர்மனியில் வீட்டின் மீது மோதிய சிறிய ரக விமானம்: ஒருவர் பலி
லண்டன் - சென்னை விமானத்தில் மோதிய பறவை! 236 போ் உயிா் தப்பினர்!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



