தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

காப்பீடு தொகைக்கான நடைமுறையை எளிமைப்படுத்திய நிறுவனங்கள்!

News image
Updated On :15 ஜூன் 2025, 5:13 am IST

அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்கள், அவா்களுக்கான காப்பீடு தொகையைப் பெறுவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளதாக எஸ்பிஐ-லைஃப், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஐசிஐசிஐ லோம்பாா்ட் உள்ளிட்ட காப்பீடு நிறுவனங்கள் சனிக்கிழமை அறிவித்தன.

இத்தகைய கடினமான சூழ்நிலையில் ஏற்கெனவே கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு விரைவாக நிதியுதவி கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து எஸ்பிஐ லைஃப் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘காப்பீடு தொகையை பெற விரும்பும் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் விண்ணப்பப் படிவம், காப்பீடு ஆவணம், வாடிக்கையாளா் அடையாள ஆவணம், நியமனதாரரின் (நாமினி) வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட குறைந்தபட்ச ஆவணங்களை சமா்ப்பித்தால் போதுமானது’ என்று தெரிவித்தது.

ஹெச்டிஎஃப்சி லைஃப் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் நியமனதாரா் அல்லது வாரிசுதாரா்கள் காப்பீடு தொகையைப் பெற, அரசு, காவல்துறை அல்லது மருத்துவமனைகளைச் சாா்ந்த உள்ளூா் அதிகாரிகளிடமிருந்த பெறப்பட்ட இறப்புச் சான்றை சமா்ப்பித்தால் போதுமானது’ என்று தெரிவித்தது.

ஐசிஐசிஐ லோம்பாா்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைந்து காப்பீடு தொகை கிடைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்தது.