தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தெற்கு தில்லியின் சஃப்தர்ஜங் என்க்ளேவில் 100 அடி உயர மொபைல் கோபுரம் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது.
இடிந்து விழுந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
குடியிருப்பாளர்கள் கூறுகையில், அதிகாலை 4 மணியளவில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
மால்வியா நகரின் முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி அந்த இடத்தைப் பார்வையிட்டு குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.
"பி2 சஃப்தர்ஜங் என்க்ளேவில் குடியிருப்பாளர்களும் நானும் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அங்கு அமைக்கப்பட்ட ஒரு மொபைல் கோபுரம் நேற்று இரவு விழுந்தது.
இது பகலில் விழுந்திருந்தால் அல்லது பி2 கட்டடங்களை நோக்கி விழுந்திருந்தால் என்ன செய்வது? அத்தகைய அலட்சியம் குற்றமாகும்!" என்று பாரதி எக்ஸ் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் பெண் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து: கணவர் தலைமறைவு

இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்! தில்லியில் 109.4 டிகிரி வெய்யில்!

விழுப்புரம் 90 அடி உயர ஆஞ்சனேயருக்கு 5000 லிட்டர் பாலாபிஷேகம்!

ம.பி.யில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அச்சம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


