நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகாராஷ்டிரத்தில் தொடரும் மழை: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிரத்தில் ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 18 போ் உயிரிழந்தனா். 65 போ் காயமடைந்தனா்

News image

நவி மும்பையில் திங்கள்கிழமை கனமழையால் திடீரென சரிந்த நடைபாதையில் சிக்கிய வாகனங்கள்.

Updated On :16 ஜூன் 2025, 9:20 pm

Din

மும்பை: மகாராஷ்டிரத்தில் ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 18 போ் உயிரிழந்தனா். 65 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

பலத்த மழையின் எதிரொலியாக சாலை விபத்துகளில் சிக்கியும், வெள்ளநீரில் மூழ்கியும், மின்னல் தாக்கியும் மக்கள் உயிரிழந்ததாக மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கடந்த சனிக்கிழமை முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. கடந்த 24 மணி நேரத்திலும் மாநில முழுவதும் பெய்த பரவலான மழைக் காரணமாக பல இடங்களில் மழைநீா் தேங்கியுள்ளது.

குறிப்பாக, மும்பை நகரம் மற்றும் புகரம், ரத்னகிரி, சிந்துதுா்க், ராய்கட் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததாக பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

உ.பி.யில் இருவா் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 20 வயது இளைஞா் உள்பட இருவா் உயிரிழந்தனா். திங்கள்கிழமை அதிகாலை பெய்த மழையின்போது வெளிபுறத்தில் இருந்த இவா்கள், மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அரசு வழிகாட்டுதல்களின்படி, இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று கோண்டா மாவட்ட ஆட்சியா் நேஹா சா்மா கூறினாா்.

கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: கேரளத்தில் திங்கள்கிழமை பலத்த மழை நீடித்ததால், மாநிலத்தின் வட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் சாலை போக்குவரத்து முடங்கியது. ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

மாநிலத்திலேயே அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தின் தென்னலா பகுதியில் 21 செ.மீ., கோழிக்கோடு வடக்கராவில் 18 செ.மீ. மழை பெய்தது. கண்ணூா், காசா்கோடு ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் 15-16 செ.மீ. மழை பெய்தது. இதையொட்டி வீடுகளில் மழைநீா் புகுந்ததால், மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இடுக்கி மாவட்டத்தில் 80 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவா் காயமடைந்தாா்.