அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கோளாறு! உண்மையைக் கூறிய ஊழியர்கள் பணிநீக்கம்!

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு புகார் தெரிவித்ததால், பணிநீக்கம் செய்யப்பட்டதாக பிரதமருக்கு விமான ஊழியர்கள் கடிதம்

News image
பிரதிப் படம்- ENS
Updated On :19 ஜூன் 2025, 1:47 pm

DIN

கடந்தாண்டில் லண்டனுக்கு இயக்கப்பட்ட போயிங் விமானத்தில் கோளாறு இருந்ததைச் சுட்டிக் காட்டிய, 2 விமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யபட்டதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து சம்பவத்தால், போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கடந்தாண்டில் ஏர் இந்தியாவின் போயிங் ரக விமானத்தில் கோளாறு இருந்ததை சுட்டிக்காட்டிய ஊழியர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

கடந்தாண்டு, மே 24 ஆம் தேதியில் மும்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா போயிங் 787 விமானம், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறக்கத்தின்போது, கதவைத் திறப்பதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து, ஏர் இந்தியா நிர்வாகத்திடம் விமான ஊழியர்கள் புகார் தெரிவித்து, அறிக்கை அளித்தனர். ஆனால், அவர்களின் புகார்களை மறுத்த நிர்வாகம், அறிக்கையை மாற்றியமைக்குமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அறிக்கையை மாற்றியமைக்க மறுப்பு தெரிவித்ததால், அடுத்த 48 மணிநேரத்துக்குள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏர் இந்தியாவின் இரண்டு முன்னாள் ஊழியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.