புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாஜக ஆட்சியைப் புகழ்ந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர்!

பாஜக அரசின்கீழ் தில்லியில் நல்லாட்சி நடத்தப்படுவதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் பேச்சு

News image

X | Rekha Gupta

Updated On :19 ஜூன் 2025, 2:59 pm

DIN

பாஜக அரசின்கீழ் தில்லியில் நல்லாட்சி நடத்தப்படுவதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

தில்லி தலைமை செயலகத்துக்கு வருகை தந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், தில்லி முதல்வர் ரேகா குப்தா, தில்லி அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா, ஒடிசா துணை முதல்வர் கனக் வர்தன் சிங், தெலுங்கு தேசக் கட்சியின் பொதுச் செயலாளர் லோகேஷ் நாராவையும் சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து, மன்ஜிந்தர் சிங் கூறுகையில், தில்லியில் முதல்வர் ரேகா குப்தாவின் ஆட்சியைக் கண்டு, டோனி பிளேர் மிகுந்த வியப்படைந்தார்.

சுகாதார மேம்பாடு, சுற்றுச்சூழல் இயக்கங்கள், பயனுள்ள நலத்திட்டங்கள் வரையில் வெறும் 100 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட அரசுப் பணிகளால் டோனி பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் முதல்வர் ரேகா குப்தாவின் ஆற்றல்மிக்க தலைமையின்கீழான பாஜக ஆட்சியின் நிர்வாகத்தால், தில்லி தொடர்ந்து வேகமாக மாறி வருகிறது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.