
இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து தில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
தில்லியில் இருந்து லே விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை 180 பயணிகளுடன் இண்டிகோவின் 6இ 2006 விமானம் புறப்பட்டுச் சென்றது.
இந்த நிலையில், லே விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மீண்டும் தில்லிக்கே திருப்பிவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் விபத்துக்கு பிறகு கடந்த 7 நாள்களில் அதிகளவிலான இந்திய விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம் மேற்கொள்ளவது பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.