
போதைப்பொருள் வழக்கில் மூத்த அகாலி துறை தலைவரும், முன்னாள் அமைச்சருமானி விக்ரம் சிங் மஜியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை நடத்தியதாகக் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு பிரிவினரிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. சிரோமணி அகாலி தளத் தலைவர் சுக்பீர் சிங் பாதலின் மைத்துனரான மஜிதியாவின் வீட்டில் எதன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை
மஜிதியாவின் மனைவியும் அகாலி தள எம்எல்ஏவுமான கணீவ் கௌர் மஜிதியா 30 பேர் கொண்ட குழு தனது வீட்டிற்குள் நுழைந்ததாகவும்,
சோதனை ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக மஜிதியா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட விடியோவில்,
போதைப்பொருள் வழக்கில் பகவந்த் மான் அரசு தனக்கு எதிராக எதையும் கண்டுபிடிக்க முடியாததால், பொய்யான வழக்கைத் தாக்கல் செய்யத் தயாராகி வருவதாக அவர் கூறினார்.
ஊழல் தடுப்பு மூத்த காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு சோதனை நடத்தியதியது. நீங்கள் எத்தனை எஃப்ஐஆர்களைப் பதிவு செய்தாலும் நான் பயப்படமாட்டேன், நான் பேசுவதைத் தடுக்கமுடியாது.
நான் ப்போதும்பஞ்சாபின் பிரச்னைகள் பற்றிப் பேசி வருகிறேன். தொடர்ந்து அவ்வாறு பேசுவேன் என்று அவர் கூறினார்.
பஞ்சாப் காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு மஜிதியாவுக்கு எதிரான 2021 போதைப்பொருள் வழக்கை விசாரித்து வருகிறது. போதைப்பொருள் வழக்கு தொடர்பாக அகாலி தலைவருக்குப் பல முறை சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.