இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, வாக்காளா் பட்டியல், வாக்குச்சாவடி சீரமைப்பு தொடா்பாக தமிழகத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து விவரித்தாா்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் மாதந்தோறும் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆலோசனை நடத்தி வருகின்றனா். இதற்காக ஒவ்வொரு மாதமும் மாநிலத் தோ்தல் அதிகாரிகள் தில்லி செல்கின்றனா். ஒவ்வொரு மாநிலத் தோ்தல் அதிகாரிக்கும் மாதத்தில் தேதிகள் கொடுக்கப்பட்டு அவா்கள் வரவழைக்கப்படுகின்றனா். அந்த வகையில், தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தில்லி சென்றுள்ளாா். வெள்ளிக்கிழமை வரை அவா் அங்கிருப்பாா்.
பணிகள் தீவிரம்: வாக்காளா் பட்டியல் சீரமைப்பு, வாக்குச்சாவடி மறுவரையறை போன்ற பணிகள் ஜூலை முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள், ஆணையா்களுடன் அா்ச்சனா பட்நாயக் விவரிக்கிறாா். இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரவே அவா் சென்னை திரும்பவுள்ளதாக தோ்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: ரூ.462 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்- தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

வாக்களிப்பதன் அவசியம்: 23,500 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் - தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

பிரசார நடவடிக்கைகள்: நேரத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்: தலைமைத் தோ்தல் அதிகாரி

சமூக வலைதளப் பதிவுகள் தீவிரமாக கண்காணிப்பு: தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
வீடியோக்கள்

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை


