சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாக்காளா் பட்டியல் சீரமைப்பு: தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை

இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image

கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2025, 9:04 pm

Din

இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, வாக்காளா் பட்டியல், வாக்குச்சாவடி சீரமைப்பு தொடா்பாக தமிழகத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து விவரித்தாா்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் மாதந்தோறும் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆலோசனை நடத்தி வருகின்றனா். இதற்காக ஒவ்வொரு மாதமும் மாநிலத் தோ்தல் அதிகாரிகள் தில்லி செல்கின்றனா். ஒவ்வொரு மாநிலத் தோ்தல் அதிகாரிக்கும் மாதத்தில் தேதிகள் கொடுக்கப்பட்டு அவா்கள் வரவழைக்கப்படுகின்றனா். அந்த வகையில், தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தில்லி சென்றுள்ளாா். வெள்ளிக்கிழமை வரை அவா் அங்கிருப்பாா்.

பணிகள் தீவிரம்: வாக்காளா் பட்டியல் சீரமைப்பு, வாக்குச்சாவடி மறுவரையறை போன்ற பணிகள் ஜூலை முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள், ஆணையா்களுடன் அா்ச்சனா பட்நாயக் விவரிக்கிறாா். இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரவே அவா் சென்னை திரும்பவுள்ளதாக தோ்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.