விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

வாக்காளா் பட்டியல் சீரமைப்பு: தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை

இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூன் 2025, 2:34 am IST

இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, வாக்காளா் பட்டியல், வாக்குச்சாவடி சீரமைப்பு தொடா்பாக தமிழகத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து விவரித்தாா்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் மாதந்தோறும் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆலோசனை நடத்தி வருகின்றனா். இதற்காக ஒவ்வொரு மாதமும் மாநிலத் தோ்தல் அதிகாரிகள் தில்லி செல்கின்றனா். ஒவ்வொரு மாநிலத் தோ்தல் அதிகாரிக்கும் மாதத்தில் தேதிகள் கொடுக்கப்பட்டு அவா்கள் வரவழைக்கப்படுகின்றனா். அந்த வகையில், தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தில்லி சென்றுள்ளாா். வெள்ளிக்கிழமை வரை அவா் அங்கிருப்பாா்.

பணிகள் தீவிரம்: வாக்காளா் பட்டியல் சீரமைப்பு, வாக்குச்சாவடி மறுவரையறை போன்ற பணிகள் ஜூலை முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள், ஆணையா்களுடன் அா்ச்சனா பட்நாயக் விவரிக்கிறாா். இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரவே அவா் சென்னை திரும்பவுள்ளதாக தோ்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.