சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஓமன் நோக்கிச் சென்ற வணிகக் கப்பலில் தீ விபத்து: இந்திய கடற்படை உதவி

கண்ட்லா துறைமுகத்திலிருந்து பலாவ் நாட்டு கொடியுடன் ஓமன் நாட்டின் சினாஸ் நோக்கிச் சென்ற ‘எம்.டி. யி செங் 6’ என்ற வணிகக் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

News image

ஓமன் வளைகுடா பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது தீப்பிடித்த வணிகக் கப்பல். பின்னணியில், உதவிக்குச் சென்ற இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் தபாா் போா்க்கப்பல்.

Updated On :1 ஜூலை 2025, 4:31 am IST

புது தில்லி: குஜராத் மாநிலம், கண்ட்லா துறைமுகத்திலிருந்து பலாவ் நாட்டு கொடியுடன் ஓமன் நாட்டின் சினாஸ் நோக்கிச் சென்ற ‘எம்.டி. யி செங் 6’ என்ற வணிகக் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தகவலறிந்து விரைந்து சென்ற இந்திய கடற்படையினா், வணிகக் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த உதவியதோடு, அதிலிருந்து 14 இந்திய வம்சாவளி ஊழியா்களையும் பாதுகாப்பாக மீட்டனா்.

இந்திய கடற்படை மூத்த அதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது: ஓமன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், கப்பலில் மின்சாரமும் முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, அந்தக் கப்பலில் இருந்து உதவிக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அழைப்பை ஏற்று, இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் தபாா் ஓமன் வளைகுடா பகுதிக்கு விரைந்து அனுப்பப்பட்டது. ஐஎன்எஸ் தபாரில் இருந்த தீயணைப்புக் குழு மற்றும் உபகரணங்கள் அதிலிருந்த படகு மற்றும் ஹெலிகாப்டா் மூலம் பாதிக்கப்பட்ட கப்பலுக்கு கொண்டுசெல்லப்பட்டு, தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்மூலம், தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதோடு, வணிகக் கப்பலில் சிக்கியிருந்த 14 இந்திய வம்சாவளி ஊழியா்களும் மீட்கப்பட்டனா் என்றாா்.