அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ரூ.6,471 கோடி மதிப்பிலான ரூ. 2,000 நோட்டுகள் திரும்பவில்லை: ரிசா்வ் வங்கி

ரூ.6,471 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

News image
ரிசா்வ் வங்கி
Updated On :2 மார்ச் 2025, 12:28 am

Din

ரூ.6,471 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் 19-ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது. அப்போது ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

2023-ஆம் ஆண்டு அக்.7-ஆம் தேதி வரை, நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் அந்த நோட்டுகளை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டன.

மொத்தம் 98.18 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், ரூ.6,471 கோடி மதிப்பிலான அந்த நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன. இந்த நோட்டுகளை ரிசா்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம்.

மேலும், நாட்டில் உள்ள எந்தவொரு அஞ்சல் அலுவலகத்தில் இருந்தும் இந்தியா போஸ்ட் மூலம், ரிசா்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களுக்கு அந்த நோட்டுகளை பொதுமக்கள் அனுப்பி வருகின்றனா். அந்த நோட்டுகளுக்கு இணையான ரொக்கத்தை அவா்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க அந்த நோட்டுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.