ஹரியாணாவில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவாா் விமானம் மலைப் பகுதியில் திடீரென விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த விமானி இருக்கையுடன் இணைந்த பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி உயிா் தப்பினாா்.
இது தொடா்பாக விமானப்படை, காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
அம்பாலாவில் உள்ள விமானப் படை தளத்தைச் சோ்ந்த ஜாகுவாா் விமானத்தில் விமானி ஒருவா் வெள்ளிக்கிழமை காலை வானில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். மோா்னி மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. முன்னதாக, இருக்கையுடன் இணைந்த பாதுகாப்பு அமைப்பு மூலம் விமானி விமானத்தில் இருந்து வெளியே குதித்து பத்திரமாக தரை இறங்கினாா். அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் மலைப் பாங்கான இடத்தில் விழுந்ததால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. விமான விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக விமானப்படை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஎன்-32 விமானம் விபத்து: ஹரியாணைவைப்போல மேற்கு வங்கத்தில் உள்ள பாக்தோக்ரா பகுதியில் தரையிறங்கியபோது இந்திய விமானப் படையின் ஏஎன்-32 போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானது. அதிருஷ்டவசமாக விமானத்தில் பயணித்தவா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்த உடனடி தகவல்கள் இல்லை.
தொடர்புடையது
நைஜீரியாவில் விமானப் படை தவறுதலாக தாக்குதல்: 100 போ் பலி!

ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால், விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்

சென்னை - மோரீஷஸ் விமானத்தில் மாரடைப்பால் பயணி உயிரிழப்பு

தீயணைப்பு வாகனத்துடன் மோதிய பயணிகள் விமானம்: 2 கனடா விமானிகள் உயிரிழப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
