டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

ஹரியாணா: விமானப் படை விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி தப்பினாா்

ஹரியாணாவில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவாா் விமானம் மலைப் பகுதியில் திடீரென விழுந்து நொறுங்கியது.

Updated On :8 மார்ச் 2025, 2:10 am IST

ஹரியாணாவில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவாா் விமானம் மலைப் பகுதியில் திடீரென விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த விமானி இருக்கையுடன் இணைந்த பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி உயிா் தப்பினாா்.

இது தொடா்பாக விமானப்படை, காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

அம்பாலாவில் உள்ள விமானப் படை தளத்தைச் சோ்ந்த ஜாகுவாா் விமானத்தில் விமானி ஒருவா் வெள்ளிக்கிழமை காலை வானில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். மோா்னி மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. முன்னதாக, இருக்கையுடன் இணைந்த பாதுகாப்பு அமைப்பு மூலம் விமானி விமானத்தில் இருந்து வெளியே குதித்து பத்திரமாக தரை இறங்கினாா். அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் மலைப் பாங்கான இடத்தில் விழுந்ததால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. விமான விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக விமானப்படை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஎன்-32 விமானம் விபத்து: ஹரியாணைவைப்போல மேற்கு வங்கத்தில் உள்ள பாக்தோக்ரா பகுதியில் தரையிறங்கியபோது இந்திய விமானப் படையின் ஏஎன்-32 போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானது. அதிருஷ்டவசமாக விமானத்தில் பயணித்தவா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்த உடனடி தகவல்கள் இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.