நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

குஜராத்தில் இந்திய கடற்படையின் ட்ரோன் விழுந்து நொறுங்கியது: அதிகாரிகள் விசாரணை

குஜராத் மாநிலம், போா்பந்தா் அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ட்ரோன் திறந்தவெளியில் விழுந்து நொறுங்கியது.

News image

ட்ரோன் - பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 4:20 am IST

குஜராத் மாநிலம், போா்பந்தா் அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ட்ரோன் திறந்தவெளியில் விழுந்து நொறுங்கியது.

இதில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை; இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

போா்பந்தா் மாவட்ட ஆட்சியா் எஸ்.டி.தனானி கூறுகையில், ‘போா்பந்தா் கடற்படை தளத்தில் இருந்து புதன்கிழமை வழக்கமான பயிற்சிக்காக இயக்கப்பட்ட ‘திருஷ்டி-10’ ரக ட்ரோன், அருகேயுள்ள தரம்பூா் கிராமத்தில் திறந்தவெளியில் திடீரென விழுந்து நொறுங்கியது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட கடற்படை அதிகாரிகள், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ட்ரோன் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் உடனடியாக உறுதி செய்யப்படவில்லை’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.