மணிப்பூரில் குகி மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குகி மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அம்மக்கள் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மணிப்பூரில் மைதேயி - குகி ஆகிய இரு இன மக்களிடையே நில விரகாரத்தில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் மணிப்பூரின் பல பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் கங்போக்கி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் குகி கிளர்ச்சியாளர்களிடையேயும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 40க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இந்நிலையில் பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குகி கிளர்ச்சியாளர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குகி மக்கள் அதிகம் வசிக்கும் சூரசந்த்பூர், தெங்னோபால் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினரை விரட்டும் வகையில் டயர்களை எரித்தும், புல்டோசர் கொண்டு சாலைகளை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் ஞாயிற்றுக்கிழமையான இன்று எந்தவிதமான வன்முறையும் பதிவாகவில்லை. கடைகள் செயல்படாததால் வணிகம் முற்றுலுமாக முடங்கியது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியே வர வேண்டாம் என கிளர்ச்சியாளர்கள் எச்சரித்தனர்.
கம்கிபாய் பகுதியின் இம்பால் - திம்பூர் சாலையில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் வாகன தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | ராகுலின் உதவியால் தொழிலதிபராகும் செருப்புத் தைக்கும் தொழிலாளி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் கொட்டித் தீா்த்த மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குமரி மாவட்டத்தில் தொடரும் பலத்த மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தெற்கு கள்ளிகுளத்தில் தேங்கிய மழை நீா்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூா்: பிணைக் கைதிகளை விடுவிக்க பேச்சுவாா்த்தை தீவிரம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



