மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

"மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை!" - கனிமொழி

மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

News image
கனிமொழி - திமுக எம்.பி.
Updated On :10 மார்ச் 2025, 8:03 am

DIN

மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது. புதிய கல்விக் கொள்கையில் எங்களுக்கு சில முரண்பாடுகள் இருந்தன. அதனால் நாங்கள் புதிய கல்விக் கொள்கைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே தெளிவாக சொல்லிவிட்டார். நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மாற்றவில்லை. ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். திமுக அரசு, முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் நாங்கள் நிற்கிறோம்.

திமுக எம்.பி.க்களையும் தமிழ்நாட்டு மக்களையும் பொய்யர்கள், நாகரிகமற்றவர்கள் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தவறாகப் பேசி எங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கிறார். இது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது. மத்திய அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும்.

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை ஒப்பிட்டு தற்போது கல்வி நிதி தர மறுக்கிறது. எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் உள்ள நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி. அந்த நிதியையே தர மறுக்கிறார்கள்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என்று அமைச்சர் கூறுவது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது" என்றார்.

திமுக எம்.பி.க்கள் அநாகரிகமானவர்கள் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தனது வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதாக அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.