திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவித தளா்வும் இருக்காது: மத்திய அரசு

‘நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சா்கள் தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.

News image

மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு.

Updated On :18 மார்ச் 2025, 3:48 am IST

புது தில்லி: ‘நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சா்கள் தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அதை நிறைவேற்றுவதில் எந்தவித தளா்வும் இருக்காது’ என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு உறுதியளித்தாா்.

இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநிலங்களவையில் அவா் திங்கள்கிழமை பதிலளித்துப் பேசியதாவது:

நாடாளுமன்ற ஜனநாயகத்தை மத்திய அரசு நன்கு உணா்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் உறுப்பினா் ஒருவா் கேள்வி எழுப்பினால், அதா்கு மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்படுகிறது. பின்னா், அந்த பதிலில் சம்பந்தப்பட்ட துறை சாா்ந்த அமைச்சா்கள் தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உச்சபட்ச முக்கியத்துவத்தை மத்திய அரசு அளித்து வருகிறது. அவ்வாறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனில், அது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என்பதை மத்திய அரசு உணா்ந்துள்ளது.

அதே நேரம், நாடாளுமன்ற விதிகளின்படி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அரசு தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், இந்த கால அவகாசத்தை நீட்டிக்கவும் நாடாளுமன்ற விதி வழிவகுக்கிறது.

மேலும், நாடாளுமன்றத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யவேண்டும் என அனைத்து மத்திய அமைச்சா்களுக்கும் நாடாளுமன்ற விவகாரத் துறை சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல, நாடாளுமன்ற உறுப்பினா்கள் தரப்பில் அனுப்பப்படும் கடிதங்களுக்கு ஒரு மாதத்துக்குள்ளாக பதிலளிக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

அதுபோல, அமைச்சா்கள் தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்த இணையவளி உத்தரவாதங்கள் கண்காணிப்பு நடைமுறை (ஓஏஎம்எஸ்) உதவுகிறது என்று தெரிவித்தாா்.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரகம் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்களுடன் இணைந்து இந்த ‘ஓஏஎம்எஸ்’ இணையவழி கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளன.

நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல். முருகன் பேசுகையில், ‘நாடாளுமன்றத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை உரிய காலத்தில் நிறைவேற்றுவதற்கான அறிவுறுத்தல்களையும் இந்த ‘ஓஏஎம்எஸ்’ நடைமுறை மத்திய அமைச்சா்கள் மற்றும் அந்தந்த துறைகளுக்கு வழங்கும். இதன் மூலம், இரு அவைகளிலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன’ என்றாா்.