சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது! -ராகுல் காந்தி

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News image
ராகுல் காந்தி...
Updated On :19 மார்ச் 2025, 3:17 am

DIN

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.

இதுபற்றி மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதாக அறிவித்துள்ளது. அதிக வாக்காளர்களின் பெயர்களைச் சேர்த்தல், தேவையற்ற பெயர் நீக்கம், போலி வாக்காளர்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் மீண்டும் மீண்டும் எழுப்பி வருகின்றன.

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் போது போலி வாக்காளர்களைக் கண்டறிய முடியும் என்றாலும், இதனை இணைப்பதில், ஏழைகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்களும் பாதிப்புக்குள்ளாகி சிரமங்களை எதிர்கொள்ளும் நிலைமை இருக்கிறது. இதனால், எந்தவொரு இந்தியரின் வாக்குகளும் பறிபோகக்கூடாது என்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும்.

தற்போது இந்தியத் தேர்தல் ஆணையம் இந்தப் பிரச்சினையை ஒப்புக்கொண்டுள்ளதால், 2024 ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களின் முழு வாக்காளர் பட்டியலையும் பகிர்ந்து பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பிரச்சினையையும் தீர்க்க வேண்டும் என்ற எனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.