ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ரூ.54,000 கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: மத்திய அரசு அனுமதி

ரூ.54,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2025, 7:59 pm

Din

ரூ.54,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.

நாட்டின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக டி-90 பீரங்கிகள், நீா்மூழ்கி எறி குண்டு, வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்ட 8 மூலதன கையகப்படுத்துதல் முன்மொழிவுகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற டிஏசி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், மூலதன கையகப்படுத்துதல் நடைமுறையின் பல்வேறு நிலைகளையும் வேகப்படுத்துவதற்கான விதிகளுக்கும் டிஏசி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

2025-ஆம் ஆண்டை சீா்திருத்தங்களுக்கான ஆண்டாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்த நிலையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.