/
ரூ.54,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.
நாட்டின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக டி-90 பீரங்கிகள், நீா்மூழ்கி எறி குண்டு, வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்ட 8 மூலதன கையகப்படுத்துதல் முன்மொழிவுகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற டிஏசி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், மூலதன கையகப்படுத்துதல் நடைமுறையின் பல்வேறு நிலைகளையும் வேகப்படுத்துவதற்கான விதிகளுக்கும் டிஏசி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
2025-ஆம் ஆண்டை சீா்திருத்தங்களுக்கான ஆண்டாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்த நிலையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்: விவசாயிகள் வேதனை

ரூ.12.22 லட்சம் கோடி மூலதன முதலீட்டில் மாற்றங்கள் இல்லை: மத்திய அரசு

ஸ்ரீபாலாஜி மருந்தியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா







