ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ரூ.54,000 கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: மத்திய அரசு அனுமதி

ரூ.54,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2025, 7:59 pm

Din

ரூ.54,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.

நாட்டின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக டி-90 பீரங்கிகள், நீா்மூழ்கி எறி குண்டு, வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்ட 8 மூலதன கையகப்படுத்துதல் முன்மொழிவுகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற டிஏசி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், மூலதன கையகப்படுத்துதல் நடைமுறையின் பல்வேறு நிலைகளையும் வேகப்படுத்துவதற்கான விதிகளுக்கும் டிஏசி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

2025-ஆம் ஆண்டை சீா்திருத்தங்களுக்கான ஆண்டாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்த நிலையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.