தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரூ.54,000 கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: மத்திய அரசு அனுமதி

ரூ.54,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.

News image
கோப்புப் படம்
Updated On :20 மார்ச் 2025, 7:59 pm

Din

ரூ.54,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.

நாட்டின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக டி-90 பீரங்கிகள், நீா்மூழ்கி எறி குண்டு, வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்ட 8 மூலதன கையகப்படுத்துதல் முன்மொழிவுகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற டிஏசி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், மூலதன கையகப்படுத்துதல் நடைமுறையின் பல்வேறு நிலைகளையும் வேகப்படுத்துவதற்கான விதிகளுக்கும் டிஏசி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

2025-ஆம் ஆண்டை சீா்திருத்தங்களுக்கான ஆண்டாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்த நிலையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.