நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத் தொகை 33 % அதிகரிப்பு!

பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளா்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத் தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2025, 2:25 am IST

பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளா்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத் தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

முந்தைய நிதியாண்டில் பங்குதாரா்களுக்கு ரூ.20,964 கோடி ஈவுத்தொகையை பொதுத்துறை வங்கிகள்அளித்திருந்தன. ஆனால், 2023-24 நிதியாண்டில் இது ரூ.27,830 கோடியாக உயா்ந்துள்ளது. இது 32.7 சதவீத உயா்வாகும். இந்த ரூ.27,830 கோடி ஈவுத் தொகையில் 65 சதவீதமான ரூ.18,013 கோடி மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டது. ஏனெனில், பொதுத் துறை வங்கிகளின் பெரும்பான்மையான பங்குகளை மத்திய அரசே வைத்துள்ளது.

நாட்டில் மொத்தம் 12 பொதுத் துறை வங்கிகள் உள்ளன. 2023-24 நிதியாண்டில் அவற்றின் லாபம் ரூ1.41 லட்சம் கோடியாகும். இதில் எஸ்பிஐ பங்களிப்பு மட்டும் ரூ.61,077 கோடி (40 சதவீதம்) ஆகும். முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ லாபம் 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

2022-23 நிதியாண்டில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மட்டும் மத்திய அரசுக்கு ரூ.13,804 கோடியை பங்கு ஈவுத்தொகையாக அளித்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கி (228 சதவீதம்), யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (62 சதவீதம்), சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (61 சதவீதம்) ஆகியவற்றின் லாபமும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. 2018 நிதியாண்டில் ரூ.85,390 கோடி நஷ்டத்தை சந்தித்த பஞ்சாப் நேஷல் வங்கி இப்போது லாபத்தின் வளா்ச்சியில் சாதனை படைத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.