முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

குளிரூட்டிகள் பயன்பாட்டில் இந்தியா முதலிடம்!

இந்தியாவில் வரும் ஆண்டுகளில் குளிரூட்டிகளின் விலையும், மின்சாரத் தேவையும் அதிகரிக்கும் என்று ஆய்வில் தகவல்

News image

பிரதிப் படம் - ENS

Updated On :26 மார்ச் 2025, 4:36 pm IST

இந்தியாவில் வரும் ஆண்டுகளில் குளிரூட்டிகளின் விலையும், மின்சாரத் தேவையும் அதிகரிக்கும் என்று அமெரிக்க பல்கலைக் கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மொத்த மக்கள்தொகையைப் பொருத்தவரை, குளிரூட்டிகளின் அதிகப்படியான தேவையில் இந்தியா முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து சீனா, நைஜீரியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், வங்கதேசம், பிரேசில், பிலிப்பின்ஸ், அமெரிக்கா இருப்பதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் உள்ள இந்திய ஆய்வு மையத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் அடுத்த பத்தாண்டுகளில் குளிரூட்டிகளின் தேவை அதிகரிக்கும் என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் இந்திய எரிசக்தி மற்றும் காலநிலை மையம் நடத்திய ஆய்வில் கூறியுள்ளது.

ஆய்வில் தெரிவித்ததாவது, இந்தியாவில் 2035 ஆம் ஆண்டில் வீட்டுப் பயன்பாட்டு குளிரூட்டிகளின் தேவை 130 மில்லியன் முதல் 150 மில்லியன்வரையில் அதிகரிக்கக் கூடும்.

இதன் மூலம், நாட்டின் உச்சபட்ச மின்தேவையும் 2020 ஆம் ஆண்டில் 120 ஜிகாவாட்டும், 2035-ல் 180 ஜிகாவாட்டுக்கும் அதிகமாக அதிகரிக்கக் கூடும். இது கிட்டத்தட்ட 30 சதவிகித அதிகரிப்பாகும்.

இந்த வளர்ச்சி, மின் பற்றாக்குறைக்கும் வழி வகுக்கலாம். இந்தியாவில், தற்போது வெப்ப அலை அதிகமாகும் வாய்ப்புகள் இருப்பதால், மின் தேவையும் 10 சதவிகிதம்வரையில் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும், குளிரூட்டிகளின் தேவை அதிகரிப்பதால், எரிசக்தி செயல்திறனை இரட்டிப்பாக்குவதன் மூலம் நுகர்வோருக்கு ரூ. 2.2 லட்சம் கோடிவரையில் பலன் கிடைக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.