தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதைதிருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

'பாஜகவுக்கு ராகுல் காந்தி உதவுகிறார்' - யோகி ஆதித்யநாத்

காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பற்றி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது...

News image

யோகி ஆதித்யநாத் | ராகுல் காந்தி

Updated On :26 மார்ச் 2025, 12:15 pm IST

ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் பாதையை தெளிவுபடுத்துவதற்கு அவர் உதவுவதாகவும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் பேசியதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ யாத்திரை' (ஒற்றுமை நடைப்பயணம்) என்பது 'பாரத் தோடோ யாத்திரை'. அதாவது இந்தியாவைப் பிரிக்கும் பிரசாரம்.

ராகுல் காந்தி, வேறு நாடுகளுக்குச் சென்று இந்தியாவை விமர்சிக்கிறார். இந்த நாட்டு மக்களுக்கு அவரின் நோக்கங்கள் என்னவென்று தெரியும்.

பாஜகவைப் பொருத்தவரை ராகுல் காந்தி போன்ற சில 'சோதனை மாதிரிகள்' இருப்பது, கட்சியின் தெளிவான பாதையை உறுதிசெய்ய உதவுகிறது. பாஜகவின் பாதையை தெளிவுபடுத்த ராகுல் காந்தி உதவுகிறார்.

அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் வேண்டுமென்றே சில பிரச்னைகளை பெரிதாக்குகிறது. அயோத்தி ராமர் கோயில், முத்தலாக் தடைச் சட்டம், நாட்டின் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் காங்கிரஸின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

காங்கிரஸ் ஏன் முத்தலாக்கை ஒழிக்கவில்லை? ஏன் கும்பமேளாவை ஊக்குவிக்கவில்லை? காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை வழங்க ஏன் தவறவிட்டது? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து, 2024 மக்களவைத் தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டிய யோகி, தேர்தல் முடிவைத் திசைதிருப்பும் முயற்சியில் சர்ச்சைக்குரிய அமெரிக்க ஹெட்ஜ் நிதி கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸிடமிருந்து காங்கிரஸ் நிதி பெற்றது தேசத்துரோகத்திற்கு ஒப்பானது என்று விமர்சித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.