மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் நிராகரிப்பு!

அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது பற்றி...

News image
ஜகதீப் தன்கர்
Updated On :27 மார்ச் 2025, 8:13 am

DIN

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் அளித்த உரிமை மீறல் நோட்டீஸை அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் வியாழக்கிழமை நிராகரித்தார்.

காங்கிரஸ் தலைமை கொறடா அளித்த உரிமை மீறல் நோட்டீஸை, தான் கவனத்துடன் பரிசீலனை செய்ததாகவும், அதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என்றும் தன்கர் கருத்து தெரிவித்தார்.

குற்றச்சாட்டு என்ன?

மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கரிடம் அளிக்கப்பட்ட அந்த நோட்டீஸில், ‘கடந்த செவ்வாய்க்கிழமை பேரிடா் மேலாண்மை மசோதா தொடா்பான விவாதத்துக்குப் பதிலளித்து அவையில் அமித் ஷா பேசினாா்.

அப்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் (யுபிஏ) ஆட்சியில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியை ஒரு குடும்பம் மட்டுமே கட்டுப்படுத்தி வந்தது. ஆனால் பிரதமா் மோடி ஆட்சியில் பிரதமரின் அவசரகால நிவாரண நிதி அவ்வாறு கட்டுப்படுத்தபடவில்லை. யுபிஏ ஆட்சியில் அரசு நிதிகள் மீது காங்கிரஸ் தலைவா் அதிகாரம் கொண்டிருந்தாா் என்று குற்றஞ்சாட்டினாா்.

தனது பேச்சில் சோனியா காந்தியின் பெயரை அமித் ஷா நேரடியாக குறிப்பிடாமல், பிரதமரின் தேசிய நிவாரண நிதி தொடா்பாக அவா் மீது பழிசுமத்தியுள்ளாா்.

அமித் ஷாவின் பேச்சு அப்பட்டமான பொய் மற்றும் அவதூறாகும். இது உரிமை மீறல் மட்டுமின்றி, அவையை அவமதிப்பதாகும். எனவே அவருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.