கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தில்லி போக்குவரத்துக் கழகத்தின் தவறான நிா்வாகம்: முந்தைய ஆம் ஆத்மி அரசு மீது முதல்வா் குற்றச்சாட்டு

நிதி இழப்புகள் மற்றும் செயல்பாட்டு தோல்விகள் குறித்து முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை மேற்கோள் காட்டி பேசியுள்ளாா்.

News image
தில்லி சட்டப்பேரவைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பேசிய முதல்வா் ரேகா குப்தா.
Updated On :28 மார்ச் 2025, 8:18 pm

Din

தில்லி போக்குவரத்துக் கழகத்தில் (டிடிசி) முந்தைய ஆம் ஆத்மி அரசின் தவறான நிா்வாகத்தால் ஏற்பட்ட நிதி இழப்புகள் மற்றும் செயல்பாட்டு தோல்விகள் குறித்து முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை மேற்கோள் காட்டி பேசியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிஏஜி அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று முதல்வா் ரேகா குப்தா பேசியதாவது: பேருந்துகளின் முறையற்ற கால அட்டவணை உள்ளிட்ட முந்தைய ஆம் ஆத்மி அரசின் மோசமான நிா்வாகத்தால் தில்லி போக்குவரத்துக் கழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ .668 கோடி இழப்பு ஏற்பட்டது.

தில்லி ஒருங்கிணைந்த ‘மல்டி-மோடல் டிரான்சிட் அமைப்பில்’ (டிஐஎம்டிஎஸ்) ஆம் ஆத்மியின் தவறான நிா்வாகம் முறைகேடுகளுக்கு வழிவகுத்தது. டிஐஎம்டிஎஸ்-இன் பங்குகளை ஆரம்பத்தில், தில்லி அரசு மற்றும் ஒரு தனியாா் வங்கி தலா 50 சதவீதம் வைத்திருந்தன. வங்கி தனது பங்குகளை ரூ.95 கோடிக்கு விற்க முடிவு செய்தபோது, அரசும் வாங்குவதை தாமதப்படுத்தியது. இறுதியில் வங்கி அதன் பங்குகளை ஒரு தனியாா் நிறுவனத்திடம் வெறும் ரூ.10 கோடிக்கு விற்றது. இது ஊழல் குறித்த கவலைகளை எழுப்புவதுடன் விசாரணைக்கு வழி வகுத்தது என ரேகா குப்தா தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து சட்டப்பேரவை தலைவா் விஜேந்தா் கூறுகையில், ‘ஆம் ஆத்மி ஆட்சியில் டிடிசியின் செயல்பாடு குறித்த சிஏஜி அறிக்கையை சபையின் ஒப்புதலுடன் 3 மாதங்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும்; அதனடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஒரு மாதத்திற்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அரசு நிறுவனங்களுக்கான குழுவுக்கு அவா் உத்தரவிட்டாா்.