/

மசூதியில் தொழுகை நடத்திய ஹிந்து கடைக்காரர்: வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு!

ஹிந்து கடைக்காரர் தொழுகை நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வலதுசாரி அமைப்பினர்.

News image

மசூதியில் தொழுகை நடத்தியபோது எடுக்கப்பட்ட படம் - X

Updated On :29 மார்ச் 2025, 6:49 pm IST

மசூதியில் தொழுகை நடத்திய ஹிந்து கடைக்காரருக்கு வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் உ.பி.யில் நடைபெற்றுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் அலிகார் நகரத்தைச் சேர்ந்தவர் சுனில் ரஜனி. இவர் அங்குள்ள மாமூ பஞ்சா பகுதியில் கடை வைத்துள்ளார். அந்தப் பகுதியில் ஹிந்து - முஸ்லிம் சமூக மக்கள் கலந்து வாழ்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 27 அன்று சுனில் ரஜனி அங்குள்ள மசூதியில் தனது முஸ்லிம் நண்பர்களுடன் இணைந்து தொழுகையில் கலந்துகொண்டார். இது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவா மோர்ச்சாவின் தலைவரான மோனு அகர்வால் என்பவர், சுனில் ரஜனி ஹிந்து மதத்தின் புனிதத்தை பாழ்படுத்தியதாகவும் அதற்கு பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரை கோவிலில் வைத்து பரிசுத்தப்படுத்த வேண்டும் என்றும் மோனு அகர்வால் கூறினார்.

ரஜனி மசூதியில் இருந்து வெளியே வந்தபோது அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி ஹிந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்துள்ளனர்.

இதுதொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.