கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூா், நாகாலாந்து, அருணாசலில் ஆயுதப் படை சிறப்புச் சட்டம் நீட்டிப்பு!

மணிப்பூா், நாகாலாந்து மற்றும் அருணாசல பிரதேசத்தில் ஆயுதப் படைகள் சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 மார்ச் 2025, 7:45 pm

Din

வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூா், நாகாலாந்து மற்றும் அருணாசல பிரதேசத்தில் ஆயுதப் படைகள் சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1958-ஆம் ஆண்டின் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டத்தின்கீழ் ‘பதற்றத்துக்குரியதாக’ அறிவிக்கப்படும் பகுதிகளில் நீதிமன்ற அனுமதி இல்லாமல் தேடுதல் - கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

வடகிழக்கில் இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை கருத்தில் கொண்டு 13 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகள் தவிர மாநிலம் முழுவதும் அமலில் உள்ள இச்சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நாகாலாந்தில் 8 மாவட்டங்கள் மற்றும் இதர 5 மாவட்டங்களில் 21 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகள், அருணாசல பிரதேசத்தில் 3 மாவட்டங்கள் மற்றும் மற்றொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் அமலில் உள்ள ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து, மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் தனித்தனியாக அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மணிப்பூரில் மைதேயி-குகி சமூகத்தினா் இடையிலான மோதல் சம்பவங்களில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா். இம்மாநிலத்தில் தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெற்று வருகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் தொடா்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு பிராந்தியத்தில் 70 சதவீத பகுதிகளில் இருந்து இச்சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் தெரிவித்திருந்தாா்.