நாடு முழுவதும் ரமலான் கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.
ரமலான் தொழுகை
ரமலான் தொழுகை கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.

தமிழகத்திலும் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகையில் பங்கேற்று கொண்டாடி வருகின்றனர்.

தொழுகை முடிந்த பிறகு, ஒருவருக்கொருவா் கட்டித்தழுவி அன்பைப் பகிா்ந்து கொண்டனா்.

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

மேலும் இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கும் ரமலான் வாழ்த்துகளை பரிமாறினர்.

தொடா்ந்து வீடுகளுக்குச் சென்ற இஸ்லாமியா்கள், உறவினா்கள் நண்பா்கள் அனைவருக்கும் பிரியாணி உள்ளிட்ட உணவுகளைப் பகிா்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இஸ்லாமியா்களின் புனிதப் பண்டிகை ஈகைப் பெருநாள் எனப்படும் ரமலான், ஒரு மாதம் பகல் முழுவதும் நோன்பு இருந்து, நிறைவாக கொண்டாடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com