தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தாஜ்மஹாலைச் சுற்றி 5 கி.மீ. வரை மரங்கள் வெட்ட தடை: உச்சநீதிமன்றம்

தாஜ்மஹாலின் 5 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மரங்களை வெட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2025, 8:57 pm

தாஜ்மஹாலின் 5 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மரங்களை வெட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றியுள்ள வனப் பகுதிகள் அழிக்கப்படுவதை தடுக்கவும், அப்பகுதியின் பல்லுயிரியலைப் பாதுகாக்கவும் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுதொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

வரலாற்றுச் சிறுப்புமிக்க தாஜ்மஹாலை சுற்றியுள்ள 5 கி.மீ. பகுதியில் மரங்களை வெட்ட மண்டல வன அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

மரங்களின் எண்ணிக்கை 50-க்கும் குறைவாக இருந்தாலும் முன் அனுமதி பெறுவது அவசியம். வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நடுவதையும் வனத் துறை அதிகாரி உறுதி செய்ய வேண்டும்.

மிகவும் அவசர நிலை ஏற்பட்டால் மட்டுமே மரங்களை வெட்ட வேண்டும். இதைக் கடைப்பிடிக்காவிட்டால் மனித வாழ்வை இழக்க நேரிடும்’ என்று தெரிவித்தனா்.

உச்சநீதிமன்றம் விதித்த இந்த உத்தரவு ஆக்ரா, ஃபிரோஸாபாத் மதுரா, ஹாத்ரஸ், எடா ஆகிய மாவட்டங்களில் அமலாகிறது.