தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அமெரிக்க- இந்திய வா்த்தக ஒப்பந்தம்: திருப்திகரமாக இருக்க ராகுல் வலியுறுத்தல்

அமெரிக்காவுடன் மத்திய அரசு மேற்கொள்ளும் வா்த்தக ஒப்பந்தம் நமது நாட்டின் அனைத்துத் தரப்பினரும் ஏற்கத் தக்க வகையிலும், திருப்திகரமாகவும் இருக்க வேண்டும்

News image
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி
Updated On :5 மே 2025, 9:41 pm

Din

புது தில்லி: அமெரிக்காவுடன் மத்திய அரசு மேற்கொள்ளும் வா்த்தக ஒப்பந்தம் நமது நாட்டின் அனைத்துத் தரப்பினரும் ஏற்கத் தக்க வகையிலும், திருப்திகரமாகவும் இருக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

அமெரிக்காவில் ஏப்ரல் 21-ஆம் தேதி பிரௌன் பல்கலைக்கழக மாணவா்கள் மத்தியில் இது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த விடியோ யூடியூப் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் இந்திய -அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:

இந்தியா வளமும், திறமையும் உள்ள நாடு. அதே நேரத்தில் உற்பத்தித் துறையில் சீனாவுடன் போட்டியிட வேண்டிய சூழல் இந்தியாவுக்கு உள்ளது. இதன் மூலம்தான் அதிக வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.

அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடா்பாக எதிா்க்கட்சிகளிடம் மத்திய அரசு எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. அமெரிக்க அதிபா் டிரம்ப் மிகவும் தீவிரமாக பேரம் பேசுபவராக உள்ளாா். அதேபோல இந்தியத் தரப்பும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது. வரி விகிதத்தை மாற்றி அமைத்துவிட வேண்டும் என்பதுதான் டிரம்ப்பின் முக்கிய நோக்கமாக உள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் வா்த்தக ஒப்பந்தம் இந்தியாவில் அனைத்துத் தரப்பினரும் ஏற்கத்தக்க வகையிலும் திருப்திகரமாகவும் இருக்க வேண்டும்.

இந்தியாவும் அமெரிக்காவும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படும்போது அது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றாா்.