போர் நிறுத்தத்தால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவி வருகிறது.
ஜம்மு - காஷ்மீரில் நள்ளிரவில் பாகிஸ்தான் எந்தத் தாக்குதலும் நடத்தாத நிலையில், அப்பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
கடந்த சில நாள்களாக நள்ளிரவு மற்றும் அதிகாலையில் பாகிஸ்தான் தாக்குதல்கள் நடந்திருந்த நிலையில், இரவில் ட்ரோன் அல்லது துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்னூர், பிரோஸ்பூர், ரஜோரி, பூஞ்ச், ஜம்மு உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே அதை மீறி எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரத்திலேயே அதை மீறி ஜம்மு-காஷ்மீர் மற்றும் குஜராத்தின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் அனைத்து ட்ரோன்களையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐ.நா.வில் ஜம்மு - காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
ஜம்மு - காஷ்மீா்: எல்லை தாண்ட முயன்ற 3 போ் கைது
.avif?w=256&q=65&auto=format%2Ccompress&fit=max)
செய்திகள் சில வரிகளில்...

வெண்கலத்துடன் வெளியேறியது இந்தியா: அரையிறுதியில் பிரான்ஸிடம் தோல்வி
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



