ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள புல்வாமாவின் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று (மே 15) சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த ஜெய்ஷ்-இ-முஹமது எனும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் பலத்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
இதில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலியான பயங்கரவாதிகளைப் பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இதேபோல், ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் வனப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளுக்கு எதிரான தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்க்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வாழ்த்து!

பாகிஸ்தான்: 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தான்: பாதுகாப்புப் படை சோதனையில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

சொல்லப் போனால்... பஹல்காமின் இருளும் ஒளியும்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



