பிகார் மாநிலம் தர்பங்காவில் மாணவர்களைச் சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
பிகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் அம்பேத்கர் விடுதி மாணவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்துரையாடவிருந்தார்.
இதற்காக மாணவர்களைச் சந்திக்கச் சென்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதனால் காவல்துறைக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

எனினும் காவல்துறை தடையை மீறி ராகுல் காந்தி நடந்தே சென்று மாணவர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.
"பிகார் காவல்துறை என்னைத் தடுக்க முயன்றது. ஆனால் அவர்களால் என்னைத் தடுக்க முடியவில்லை. ஏனென்றால் மாணவர்களாகிய உங்கள் சக்தி என்னைக் கண்காணித்து கொண்டிருக்கிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நாங்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறினோம். உங்களுடைய அழுத்தத்தினால் சாதி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்" என்று பேசியுள்ளார்.

மேலும் "தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைச் சந்திக்க பிகார் அரசு என்னைத் தடுக்கிறது.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஜி, ஏன் பயப்படுகிறீர்கள்? மாநிலத்தின் கல்வியையும் சமூக நீதியையும் மறைக்கப் பார்க்கிறீர்களா?" என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாமதமான க்யூட் தேர்வு! ஒரு தேர்வைக்கூட நடத்த முடியவில்லை: ராகுல் குற்றச்சாட்டு

ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்
சிபிஎஸ்இ விவகாரம்! கல்வி அமைச்சரை பிரதமர் நீக்கியிருக்க வேண்டும்: ராகுல்
முதல்வர் விஜய் - ராகுல் சந்திப்பு நடைபெறாதது ஏன்?
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



