நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தெலங்கானாவில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது!

தெலங்கானாவில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

இஸ்ரேல் நாட்டின் தேசியக் கொடி

Updated On :17 மே 2025, 5:14 pm IST

தெலங்கானா மாநிலத்தில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியை முன்னிட்டு, ஹைதரபாத்திலுள்ள அம்மாநில அரசின் தலைமைச் செயலகம் அருகில் இஸ்ரேல் நாட்டின் கொடி ஏற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் அந்தக் கொடி இரண்டு முறை அடையாளம் தெரியாத நபர்களால் அகற்றப்பட்டதாக காவல் நிலையத்தில் இரண்டு வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த மே 12 ஆம் தேதியன்று, கொடி ஏற்றப்பட்டிருந்த இடத்திலிருந்து அது மாயமானதினால், பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அங்கு மற்றொரு கொடி ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கடந்த மே 14 ஆம் தேதியன்று, அந்தக் கொடி மீண்டும் மாயமானதினால், மே 16 ஆம் தேதி மற்றொரு புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அப்பகுதியில் பைக் மெக்கானிக்காக வேலை செய்து வந்த ஜாகீர் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதில், அந்தக் கொடியை அகற்றியதை தனது சமூக வலைதளத்திலும் அவர் பதிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலுக்கான காரணம் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரையில் வெளியிடப்படாத நிலையில் போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்துடன், அவர் மீது திருட்டு மற்றும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மே 12 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை காவல் துறையினர் தேடி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.