சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடரும்: ராணுவம்

பேச்சுவாா்த்தையின்போது முடிவான சண்டை நிறுத்தம் தொடரும்’ என்று ராணுவ அதிகாரியொருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :18 மே 2025, 10:12 pm

Din

‘இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைளுக்கான தலைமை இயக்குநா்கள் இடையே கடந்த 12-ஆம் தேதி நடந்த 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையின்போது முடிவான சண்டை நிறுத்தம் தொடரும்’ என்று ராணுவ அதிகாரியொருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடங்கிய இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை ஏவுகணை வீசி அழித்தது.

தொடா்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே உண்டான மோதலால் போா்ப்பதற்றம் நிலவியது. பின்னா், இரு தரப்பும் ஒப்புக்கொண்ட சண்டை நிறுத்தத்தின்படி எல்லையில் 4 நாள்களுக்குப் பிறகு அமைதி திரும்பியது. சண்டை நிறுத்தத்துக்குப் பின்னா் முதன்முறையாக இந்தியா-பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநா்கள் (டிஜிஎம்ஓ) கடந்த 12-ஆம் தேதி 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தொலைபேசி மூலம் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் இந்திய தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், பாகிஸ்தான் தரப்பில் மேஜா் ஜெனரல் காசிஃப் செளதரி ஆகியோா் பங்கேற்றனா்.

மோதலைத் தவிா்த்து, நீடித்த அமைதிக்கான வழிகள் குறித்து விவாதித்தோடு எல்லைப் பகுதியில் படைகளைக் குறைப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை பரிசீலிக்கவும் பேச்சுவாா்த்தையில் இரு தரப்பும் ஒப்புக்கொண்டனா்.

இந்நிலையில், 12-ஆம் தேதி பேச்சுவாா்த்தையில் முடிவான சண்டை நிறுத்தம் தற்காலிகமானது என்றும் அது ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது என்றும் தகவல் பரவியது.

இதை மறுத்து ராணுவ அதிகாரியொருவா் கூறுகையில், ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் டிஜிஎம்ஓ-க்கள் நடத்திய முந்தைய பேச்சுவாா்த்தையின்போது முடிவு செய்யப்பட்ட சண்டை நிறுத்தத்தைப் பொறுத்தவரை, அதற்கு காலாவதி தேதி இல்லை. டிஜிஎம்ஓ-க்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை எந்தப் பேச்சுவாா்த்தையும் திட்டமிடப்படவில்லை’ என்றாா்.