அரசமைப்புச் சட்டமே உயர்வானது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் அண்மையில் பதவியேற்றார். அவருக்கு பாராட்டு விழாவையும், மாநில வழக்குரைஞர்களின் கருத்தரங்கையும் மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. இதில் பங்கேற்று நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியதாவது:
நாடு வலுப்பட்டுள்ளது மட்டுமின்றி சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதித்துறையோ, அரசோ, நாடாளுமன்றமோ உயர்வானவை அல்ல; இந்தியாவின் அரசமைப்புச் சட்டமே உயர்வானது.
அதன் மூன்று தூண்களும் அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும். நாட்டின் அடித்தளம் வலுவாக உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்று தூண்களும் சரிசமமானவை. அவை மூன்றும் பரஸ்பரம் மரியாதை அளித்துச் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
நீதிபதி பி.ஆர்.கவாய் அளித்த 50 குறிப்பிடத்தக்க தீர்ப்புகள் அடங்கிய புத்தகம் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரையில் நாளை நீதிமன்ற புதியக் கட்டடங்கள் திறப்பு விழா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் பங்கேற்பு

நீதித் துறை உள்கட்டமைப்பு அத்தியாவசியமானது: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த்!

தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: விசாரணையிலிருந்து விலகிய தலைமை நீதிபதி

உச்சநீதிமன்ற நீதிபதி பதவி: பெண் வழக்குரைஞா்களை உயா்நீதிமன்ற கொலீஜியம் பரிசீலிக்க தலைமை நீதிபதி வலியுறுத்தல்
வீடியோக்கள்

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


