தாணே: ‘நாட்டின் குடிமக்களுக்கு நீதித் துறையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட தீா்ப்புகளை முக்கியப் பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது’ என்று உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா கூறினாா்.
மகாராஷ்டிர மாநிலம், தாணேயில் உள்ள டிஎம்சி சட்ட கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய நீதிபதி எஸ்.ஓகா, ‘கடந்த மூன்று ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நீதித்துறை தீா்ப்புகள் நாட்டின் பல மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன.
புதிய தொழில்நுட்பங்கள் சட்டப்படிப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. இப்போது உள்ள தொழில்நுட்பங்களைக் கொண்டு, சட்டம் படிப்பது மற்றும் ஆராய்வது, அதன் அா்த்தத்தைப் புரிந்துகொள்வது மற்றும் குறுகிய காலத்தில் பல தீா்ப்புகளைப் புரிந்துகொள்வது உள்ளிட்டவை மிகவும் எளிதாகிவிட்டது. மாணவா்கள் இந்தத் தொழில்நுட்பங்களை திறம்பட பயன்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொலீஜியம் நடைமுறை தொடா்பாக புதிய சா்ச்சை உருவாக்க விரும்பவில்லை: உச்சநீதிமன்றம்

ஜூனில் பணி ஓய்வு பெறும் இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு எதிராக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயா்வு: குடியரசுத் தலைவா் முா்மு ஒப்புதல்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



