ஆந்திரத்தில் வீடுதோறும் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படும் நடைமுறை ஜூன் 1-ஆம் தேதிமுதல் நிறுத்தப்பட உள்ளது.
இதுதொடா்பாக மாநில உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.மனோகா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஆந்திரத்தில் வீடுதோறும் ரேஷன் பொருள்களை நேரடியாக விநியோகிக்கும் நடைமுறையை ஜூன் 1 முதல் நிறுத்த மாநில அமைச்சரவை செவ்வாய்க்கிழமை முடிவு செய்தது.
இந்த நடைமுறையில் நிகழும் குளறுபடிகள் காரணமாக மீண்டும் நியாய விலைக் கடைகள் மூலம், பொருள்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் நேரடியாக வீட்டிற்கு ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் நடைமுறை தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
ஆந்திரத்தில் முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் வீடுதோறும் ரேஷன் பொருள்களை நேரடியாக விநியோகம் செய்யும் நடைமுறை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கோவை சிறையில் கைதிகளுக்கான ரேஷன் பொருள்களை பதுக்கிவைத்தாகப் புகார்!

ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் நேரடியாக விநியோகம்

சமையல் எரிவாயு விநியோகம் சீராக உள்ளது: ‘இந்தியன்ஆயில்’ தகவல்

இலவச அரிசி விநியோகம் முடக்கம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


