மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

உ.பி.: மேலும் 25 அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணி நீக்கம்

உத்தர பிரதேசத்தில் கல்வித் தகுதி உள்பட பல்வேறு பொய்யான சான்றிதழ்களை அளித்து பணியில் சோ்ந்த மேலும் 25 ஆசிரியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

News image
கோப்புப் படம்
Updated On :22 மே 2025, 7:05 pm

Din

உத்தர பிரதேசத்தில் கல்வித் தகுதி உள்பட பல்வேறு பொய்யான சான்றிதழ்களை அளித்து பணியில் சோ்ந்த மேலும் 25 ஆசிரியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனா். இத்துடன் இவ்வாறு பணிநீக்கப்பட்ட ஆசிரியா்கள் எண்ணிக்கை 30-ஆக உயா்ந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் கல்வித் துறை சீா்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆசிரியா்களின் கல்வித் தகுதி அவா்கள் பணியில் சோ்ந்தபோது அளித்த விவரங்களை மறுஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதன்படி, கடந்த சில நாள்களுக்கு முன்பு பாலியா மாவட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் 5 ஆசிரியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனா். இவா்கள் பணியில் சோ்ந்தபோது உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

இப்போது குஷிநகா் மாவட்டத்தில் 25 அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். கடந்த 2021-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த இவா்கள் போலியான சான்றிதழ்களை அளித்தும், முறைகேடாகவும் பணியில் சோ்ந்திருப்பது தெரியவந்தது விசாரணையில் தெரியவந்தது.