புது தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலம் முழுவதும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தெற்காசியாவில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தலைநகர் புது தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதால், அம்மாநில அரசு அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, புது தில்லியின் சுகாதாரத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் இன்று (மே 23) கூறுகையில், மே 22 ஆம் தேதி வரை 23 கோவிட்-19 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் பயண விவரங்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்துடன், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“தில்லி அரசு எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளது. நாங்கள் ஏற்கனவே மருத்துவ கண்காணிப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைக் குழுக்களுடன் ஒருங்கிணைந்துள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
அவசரகால தயார்நிலை குறித்து கூறுகையில், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் எச்சரிக்கையாகவுள்ளதாகவும், உடனடி செயல்பாட்டுக்கு அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் தயார்நிலையிலுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கரோனா பாதிப்புகள் அதிகரிப்பதனால், தில்லி அரசு அம்மாநிலத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துக்கள் மற்றும் தடுப்பூசிகளை தயார்நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நுகா்வோா் பாதுகாப்பாக இருப்பதை தில்லி அரசு உறுதி செய்யும்: ஆஷிஷ் சூட்

தில்லியில் பயிற்சி மையங்களுக்கான கொள்கை உருவாக்கம்: அமைச்சா் தகவல்

கன்வாா் யாத்திரை குழுவை மறுசீரமைத்தது தில்லி அரசு

சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



