அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி! கண்காணிப்புகள் தீவிரம்!

தலைநகர் தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

News image
கோப்புப் படம்
Updated On :23 மே 2025, 4:02 pm

DIN

புது தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலம் முழுவதும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தெற்காசியாவில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தலைநகர் புது தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதால், அம்மாநில அரசு அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, புது தில்லியின் சுகாதாரத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் இன்று (மே 23) கூறுகையில், மே 22 ஆம் தேதி வரை 23 கோவிட்-19 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் பயண விவரங்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்துடன், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“தில்லி அரசு எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளது. நாங்கள் ஏற்கனவே மருத்துவ கண்காணிப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைக் குழுக்களுடன் ஒருங்கிணைந்துள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

அவசரகால தயார்நிலை குறித்து கூறுகையில், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் எச்சரிக்கையாகவுள்ளதாகவும், உடனடி செயல்பாட்டுக்கு அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் தயார்நிலையிலுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கரோனா பாதிப்புகள் அதிகரிப்பதனால், தில்லி அரசு அம்மாநிலத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துக்கள் மற்றும் தடுப்பூசிகளை தயார்நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.