ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர் உள்பட 2 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜார்க்கண்டின் லதேஹார் மாவட்டத்தில், மாநில காவல் துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியோர் இணைந்து இன்று (மே 24) அதிகாலை முதல் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, லதேஹார் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல்களில், மாவோயிஸ்டுகளின் கிளை அமைப்பான ஜார்க்கண்ட் ஜன் முக்தி பரிஷான் எனும் அமைப்பின் தலைவரான பப்பு லோஹரா மற்றும் அவருடன் செயல்பட்டு வந்த பிரபாத் கஞ்சு ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இதில், பப்பு என்பவரைப் பிடிக்க காவல் துறையினர் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்து தேடிவந்த நிலையில் இன்று அவர் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளின் மூலம் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இத்தாலியில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக்கொலை
கந்தா்வகோட்டை: பறக்கும் படையினரால் ரூ.1.76 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

ராஜபாளையம் அருகே தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.46 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


