சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அசாமில் 9 வங்கதேசத்தினர் கைது

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 9 வங்கதேசத்தினர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
கைது
Updated On :24 மே 2025, 2:47 pm

DIN

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 9 வங்கதேசத்தினர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோரிகான், மிகிர்பேட்டா மற்றும் தரம்துல் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தலா இரண்டு பேரும், ஜாகிரோட், மாயோங் மற்றும் லஹோரிகட் காவல் நிலையப் பகுதிகளில் இருந்து தலா ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

மோரிகான் எல்லை காவல் பிரிவு ஒரு ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அவர்களைக் கைது செய்துள்ளது.

இதனிடையே வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தால் அவர்கள் அனைவரும் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் கைது செய்யப்படுவதை அவர்கள் தவிர்த்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தீர்ப்பாயத் தீர்ப்பை எதிர்த்து குவஹாத்தி உயர் நீதிமன்றத்தை அணுகியதாகவும், ஆனால் அவர்களின் மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டதாகவும் போலீஸார் மேலும் கூறினர்.

கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.