மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அசாமில் 9 வங்கதேசத்தினர் கைது

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 9 வங்கதேசத்தினர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image

கைது

Updated On :24 மே 2025, 2:47 pm

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 9 வங்கதேசத்தினர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோரிகான், மிகிர்பேட்டா மற்றும் தரம்துல் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தலா இரண்டு பேரும், ஜாகிரோட், மாயோங் மற்றும் லஹோரிகட் காவல் நிலையப் பகுதிகளில் இருந்து தலா ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

மோரிகான் எல்லை காவல் பிரிவு ஒரு ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அவர்களைக் கைது செய்துள்ளது.

இதனிடையே வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தால் அவர்கள் அனைவரும் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் கைது செய்யப்படுவதை அவர்கள் தவிர்த்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தீர்ப்பாயத் தீர்ப்பை எதிர்த்து குவஹாத்தி உயர் நீதிமன்றத்தை அணுகியதாகவும், ஆனால் அவர்களின் மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டதாகவும் போலீஸார் மேலும் கூறினர்.

கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.