திரிபுராவின் உனகோட்டி மாவட்டத்தின் கைலாசஹர் நகரில் புதிதாக 46 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சில நாள்களாக திரிபுராவில் டெங்கு பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், புதிதாக 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைலாசஹர் துணைப்பிரிவு மருத்துவமனையின் மருத்துவர் ரோஹன் பால் கூறுகையில்,
கைலாசஹரில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்.
கொசுக்களால் பரவும் நோய்க்கான பரிசோதனைகள் ஆண்டு முழுவதும் நடத்தப்படுகின்றது. இருப்பினும் கைலாசஹர் நகரம் மாநிலத்தின் பிற பகுதிகளை விட டெங்குவால் அதிகம் பாதிக்கப்படுகிறது.
துணைப்பிரிவு மருத்துவமனையிலோ அல்லது அருகிலுள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களிலோ டெங்கு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மக்களைப் பரிந்துரைக்கிறோம். சரியான நோயறிதல் இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்வது உடல்நல அபாயங்களுக்கு வழிவகுக்கும். பலர் மருத்துவரின் சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் சுய மருந்துகளை நாடுகின்றனர்.
தேங்கி நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்யும் ஏடிஸ் கொசுவால் டெங்கு பரவுகிறது. கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க மக்கள் தங்கள் வீடுகள் அல்லது பணியிடங்களைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் நோய் மேலும் பரவாமல் தடுக்க சுகாதார அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரங்களை முடக்கிவிட்டு கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Summary
Forty-six new dengue cases have been reported from Kailasahar town of Tripura's Unakoti district, an official said.
இதையும் படிக்க: பிகார் தேர்தலில் பெண்கள் அதிகளவில் வாக்களிப்பு: பாஜக
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காங்கோவில் 3,200ஐக் கடந்த எபோலா பாதிப்பு! 1,437 பேர் பலி!

நிகழாண்டில் 9,250 பேருக்கு டெங்கு: மூவா் உயிரிழப்பு

வேகமாகப் பரவும் எபோலா: காங்கோவில் 930 பேர் பலி!

சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



