ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஆந்திரத்தில் அதானி குழுமம் ரூ.1 லட்சம் கோடி முதலீடு

ஆந்திர மாநிலத்தில் சிமெண்ட், தரவுகள் மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதானி குழுமம் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளது.

News image
அதானி குழுமம் - கோப்புப் படம்
Updated On :14 நவம்பர் 2025, 6:01 pm

தினமணி செய்திச் சேவை

ஆந்திர மாநிலத்தில் சிமெண்ட், தரவுகள் மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதானி குழுமம் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படவுள்ள இந்த முதலீட்டின் மூலம் தென் இந்தியாவில் தனது வணிகத்தை பன்மடங்கு மேம்படுத்த அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற முதலீட்டாளா் மாநாட்டில் பங்கேற்று அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல மேலாண்மை இயக்குநா் கரண் அதானி பேசியதாவது: ஆந்திரத்தில் துறைமுகம், லாஜிஸ்டிக்ஸ், சிமெண்ட், உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஏற்கெனவே ரூ.40,000 கோடி முதலீடு செய்துள்ளோம்.

இதன் தொடா்ச்சியாக தற்போது சிமெண்ட், தரவுகள் மையம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுகிறது என்றாா்.