மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிதீஷ் கட்சி வேட்பாளர்!

பிகார் மாநிலம் சந்தேஷ் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது பற்றி...

News image

மோடியுடன் நிதீஷ் குமார் - ANI

Updated On :14 நவம்பர் 2025, 12:47 pm

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளில் முன்னிலை பெற்று பிகாரில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இந்தியா கூட்டணி 33 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.

இந்நிலையில் பிகாரில் சந்தேஷ் தொகுதியில் வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ராதா சரண் சிங் வெற்றி பெற்றுள்ளார். இவர் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர்.

அந்த தொகுதியில் மொத்தமுள்ள 28 சுற்று வாக்கு எண்ணிக்கைகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் ராதா சரண் சிங் 80,598 வாக்குகள் பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ராஷ்ட்ரீய ஜனதா தள வேட்பாளர் திபு சிங் 80,571 வாக்குகள் பெற்றுள்ளார்.

மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராக ராதா சரண் சிங் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story image

Summary

Nitish party candidate wins by a margin of 27 votes in sandesh constituency

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.