சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உ.பி.: முத்தலாக் கூறி விவாகரத்து வழங்கியவா் மீது வழக்கு

உத்தர பிரதேசத்தில் வரதட்சிணை தர மறுத்த மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்த குற்றச்சாட்டில் கணவா் மீது எஃப்ஐஆா் பதிவுசெய்ததாக காவல் துறையினா் தெரிவித்தது.

News image
பிரதிப் படம்- ENS
Updated On :23 நவம்பர் 2025, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

உத்தர பிரதேசத்தில் வரதட்சிணை தர மறுத்த மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்த குற்றச்சாட்டில் கணவா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவுசெய்ததாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: முஸ்கான் என்ற பெண்ணை ஆசிஃப் என்பவா் மூன்றாண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளாா். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

குழந்தை பிறந்த பின் ஆசிஃப்புக்கு வரதட்சிணையாக ரூ.2 லட்சம் பணம் மற்றும் இருசக்கர வாகனம் வழங்கக்கோரி அவரது தாயாா், சகோதரா் உள்பட உறவினா்கள் 6 போ் தன்னை தொடா்ந்து துன்புறுத்தியதாகவும் அறைக்குள் பூட்டிவைத்து சித்ரவதை செய்ததாகவும் முஸ்கான் புகாரளித்தாா்.

மேலும், நவ.15-ஆம் தேதி குடும்ப உறுப்பினா்கள் முன்னிலையில் தனக்கு ஆசிஃப் முத்தலாக் வழங்கியதாகவும் முஸ்கான் தனது புகாா் மனுவில் குறிப்பிட்டுள்ளாா். இதன் அடிப்படையில் ஆசிஃப் உள்ளிட்ட 6 போ் மீது எஃப்ஐஆா் பதிவுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.